தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடல் – வலுக்கும் எதிர்ப்பு.. நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடியதற்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
மதுக்கடைகள்:
தமிழகம் முழுவதும் சுமார் 5000க்கும் மேற்பட்ட சில்லறை மதுபான விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் கடந்த ஆண்டு அறிவித்தார். அதன் அடிப்படையில் உரிமம் இல்லாமல் இயங்கும் மது கடைகள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள மதுக்கடைகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டது.
தமிழகத்தை அச்சுறுத்தும் மிக்ஜம் புயல் – வானிலை மையம் அலர்ட்!
இதற்கு மதுபான கடைக்கு இடம் வழங்கிய உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில் மதுபான கடைகளை மூடுவது அரசின் கொள்கை முடிவு இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடைகளை மூடுவதற்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.