மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான DA உயர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!!

0
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - விரைவில் உயரும் சம்பளம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான DA உயர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாத அகவிலைப்படியாக 4% உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டிற்கான ஜனவரி மாத அகவிலைப்படி எப்போது வழங்கப்படும் என ஊழியர்கள் கேள்வி எழுப்ப துவங்கிவிட்டனர்.

அஞ்சலக கணக்கு முடங்கி விட்டதா? கவலையை விடுங்க.. ஈஸியா அப்டேட் பண்ணலாம்!

இதனிடையே, இந்தியாவில் மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கிறது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மிக கூடிய விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 46%த்தின் அடிப்படையில் அகவிலைப்படிக்கான பலனை பெற்று வரும் நிலையில் ஜனவரி மாதத்தில் மேலும் 4% உயர்வு வழங்கப்பட்டு 50% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!