மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு அன்று விடுமுறை- தொழிலாளர் நலத்துறை உத்தரவு!

0
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு அன்று விடுமுறை- தொழிலாளர் நலத்துறை உத்தரவு!

தமிழகத்தில் தொழிலாளர் நலத்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி மக்களவைத் தேர்தல் அன்று ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது .

வாக்குப்பதிவு அன்று விடுமுறை:

தமிழகத்தில் மக்களவை பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

SSC JE வேலைவாய்ப்பு 2024 – 968 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஏப்ரல் 18 கடைசி நாள்!

மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிபிஓ நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார்கள் அளிக்க பொது மக்களுக்கு தெரியும் வகையில் அதற்கான புகார் எண்களை விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!