CBSE பள்ளி மாணவர் சேர்க்கை வயது வரம்பில் குழப்பம் – உண்மை நிலவரம் என்ன?

0
CBSE பள்ளி மாணவர் சேர்க்கை வயது வரம்பில் குழப்பம் - உண்மை நிலவரம் என்ன?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது வரம்பின் விதிமுறைகள் குறித்தான குழப்பம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிபிஎஸ்சி வாரியம்:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஆனது முன்னதாக முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மாணவருக்கு ஐந்து வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்ற விதியை செயல்படுத்தியது. ஆனால் கடந்த ஆண்டு முதல் முதலாம் வகுப்பு சிபிஎஸ்சி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு ஆறு வயது முடிந்திருக்க வேண்டும் என்றும், அதிகபட்சமாக மாணவர் 7.5 வயது வரை சேர்க்கைக்கு தகுதி பெற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதாக பெற்றோர்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளது.

SSC JE வேலைவாய்ப்பு 2024 – 968 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஏப்ரல் 18 கடைசி நாள்!

ஆறு வயது விதிமுறை முன்னதாக இல்லை என்றும் புதிதாக பள்ளிகள் இதை அமல்படுத்தி உள்ளதாகவும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் 10 முதல் 30% வரையிலான கட்டண உயர்வை அமல்படுத்தியதால் முதலாம் வகுப்பிற்கு ரூபாய் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அரசு இது குறித்த விஷயத்தில் தலையிடுவதில்லை என்றும் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் பெற்றோர்களின் புகார் குறித்து அரசு விரைவில் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!