தமிழகத்தில் நாளை வெளுக்கப்போகும் கனமழை – பொதுமக்களுக்கான எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் நாளை வெளுக்கப்போகும் கனமழை - பொதுமக்களுக்கான எச்சரிக்கை!!
தமிழகத்தில் நாளை வெளுக்கப்போகும் கனமழை - பொதுமக்களுக்கான எச்சரிக்கை!!
தமிழகத்தில் நாளை வெளுக்கப்போகும் கனமழை – பொதுமக்களுக்கான எச்சரிக்கை!!

வங்கக்கடல் பகுதிகளில் நாளை புயல் சின்னம் உருவாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் அதிகன மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை:

நாளை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கனமழை டிசம்பர் இரண்டாம் தேதி வரையிலும் நீட்டிக்கலாம் எனவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADMIN வேலைக்கு பணியாளர்கள் தேவை – சூப்பர் வாய்ப்பு!உடனே விண்ணப்பியுங்கள்!

சென்னையை பொருத்தவரையிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான கனமழை பொழியலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!