தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு – சவரன் ரூ.45,600க்கு விற்பனை!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் ஆயுதபூஜையை முன்னுட்டு அதிரடியாய் தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டது. இதன் பின்னர், தற்போது தான் ஓரளவுக்கு தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்திருக்கிறது. அதன்படி, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 9 உயர்ந்து ரூ.6165க்கும், சவரனுக்கு ரூ. 73 உயர்ந்து ரூ.49,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.5695க்கும், சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.45,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
வாரஇறுதி நாளையொட்டி 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!!
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்திருக்கிறது. அதாவது, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.6170க்கும், சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.49,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5700க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.77.70க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 70 காசுகள் குறைந்து ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.