வாரஇறுதி நாளையொட்டி 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!!
தமிழகத்தில் வார இறுதி நாளையொட்டி 600 சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ளதாக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து:
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் தற்போது இருந்தே பெரும்பாலான பொதுமக்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், வார இறுதி நாட்களை முன்னிட்டு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகை – அடுத்த ஜாக்பாட் ரெடி!!
அதாவது, சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூரில் இருந்து கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் என மொத்தமாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக, தீபாவளி பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 10,975 சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.