ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் திடீர் அறிவிப்பு!
தற்போது ஓமைக்காரன் பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. அதில் குறிப்பாக நெதர்லாந்து அரசு ஓமைக்ரான் பரவல் வேகமாக பரவுவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு நீட்டிப்பு:
முதன்முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவல் பல்வேறு உலக நாடுகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ நவ.24 ஆம் தேதி அன்று கண்டறியப்பட்டது. மேலும் இது மிகவும் வேகமாக பரவ கூடியதாக உள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன.
மாநில அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மீண்டும் 3% DA உயர்வு! அரசு அதிரடி!
இதனை தொடர்ந்து இந்தியாவிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தற்போது இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அத்துடன் ஓமைக்ரான் தொற்று பரவல் இஸ்ரேல், அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி உள்ளது. இதனை தொடர்ந்து நெதர்லாந்து நாடு ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 28 முதல் உணவகங்கள், பொது இடங்கள், திரையரங்குகள் ஆகிய இடங்கள் 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வந்தது.
டிசம்பர் 22 முதல் ஜனவரி 2 வரை 144 தடை உத்தரவு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மாநில அரசுக்கு பரிந்துரை!
தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதி அனைத்து பள்ளிகளுக்கும் இரண்டு வாரம் விடுமுறை என்று அறிவித்திருந்தது. அதனை தற்போது ஒரு வாரத்துக்கு நீட்டித்து மொத்தம் 3 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இவ்வாறு பொதுமக்களின் நலன் கருதி ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அவர்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து அறிவித்துள்ளார்.