தமிழகத்தில் திங்கட்கிழமை (டிச.20) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
கடலூர் மாவட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறவுள்ள ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அம்மாட்ட அரசு அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் விழாக்கள் கொண்டாடப்படும். அதாவது ஆனி மாதம் திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் கடந்த ஆண்டு இந்த விழாக்கள் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கொண்டாடப்படவில்லை.
மாநில அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மீண்டும் 3% DA உயர்வு! அரசு அதிரடி!
இந்நிலையில் இந்த ஆண்டு தற்போது கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் குறைந்துள்ளதால் விழாக்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மார்கழி மாதம் கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடுவதற்கு முடிவு செய்து கடந்த டிசம்பர் 11ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய இரண்டும் இருந்து வருகிறது. இத்தகைய தேரோட்டம் நாளை டிச.19ம் தேதியும், ஆருத்ரா தரிசனம் திங்கட்கிழமை டிச.20ம் தேதியும் நடைபெற உள்ளது.
டிசம்பர் 22 முதல் ஜனவரி 2 வரை 144 தடை உத்தரவு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மாநில அரசுக்கு பரிந்துரை!
இந்த விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் ஆருத்ரா தரிசனம் நடைபெறும் டிச.20ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய வரும் ஜன.8ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஒரு சில அவசர பணிகளை கவனிக்கும் விதமாக குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.