டிசம்பர் 22 முதல் ஜனவரி 2 வரை 144 தடை உத்தரவு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மாநில அரசுக்கு பரிந்துரை!

0
டிசம்பர் 22 முதல் ஜனவரி 2 வரை 144 தடை
டிசம்பர் 22 முதல் ஜனவரி 2 வரை 144 தடை
டிசம்பர் 22 முதல் ஜனவரி 2 வரை 144 தடை உத்தரவு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மாநில அரசுக்கு பரிந்துரை!

கர்நாடகாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைகளை பரிந்துரைத்து, பெங்களூரு மற்றும் மாநிலம் முழுவதும் டிசம்பர் 22 முதல் ஜனவரி 2 வரை 144 மற்றும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்க வேண்டும் என்று அரசிற்கு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

144 தடை உத்தரவு:

கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 238 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது, மற்றும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 30,01,792 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 38,282 ஆகவும் உள்ளது. நாட்டிலேயே முதன்முதலாக கர்நாடகா மாநிலத்தில் தான் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மேலும் ஐந்து பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று (டிச.18) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மாநிலத்தில் அதிகரித்து வரும் ஓமைக்ரான் தொற்று எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (டிஏசி) வெள்ளிக்கிழமை அரசுடன் ஆலோசனை நடத்தியது. அதில், 144 பிரிவு மற்றும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு முன்னதாக இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்க பரிந்துரைத்துள்ளது. கர்நாடகாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைகளை பரிந்துரைத்து, பெங்களூரு மற்றும் மாநிலம் முழுவதும் டிசம்பர் 22 முதல் ஜனவரி 2 வரை 144 மற்றும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்க அறிவுறுத்தியுள்ளது. முக்கிய சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் பிற பொது இடங்களில், குறிப்பாக பிரிகேட் சாலை, எம்.ஜி. சாலை, கமர்ஷியல் தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

பரிந்துரை பட்டியல்:
  • பெங்களூரு மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று TAC பரிந்துரைத்துள்ளது.
  • டிசம்பர் 22 முதல் ஜனவரி 2 வரை 200 பேருக்கு மேல் மக்கள் கூடுவதை அனுமதிக்கக்கூடாது.
  • தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் மசூதிகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
  • ஓமைக்ரான் சூழலில் கட்டுப்பாடுகள் அவசியம் என்று TAC தலைவர் எம்.கே.சுதர்சன் கூறியுள்ளார்.
  • ஆனால் வழக்கமான வணிகம் பப்கள், உணவகங்கள், கிளப்புகள் மற்றும் மற்ற நிறுவனங்களில் கடுமையான கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படலாம் என்று TAC கூறியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!