தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || இறுதி வாய்ப்பு..!
NABARD வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Chief Technology Officer, Chief Risk Manager, Data Designer, Lead BI designer, ETL Designer, Specialist Officer (Legal) பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
NABARD வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் அனைத்து பணிகளுக்கும் தலா ஒரு காலிப்பணியிடங்கள் என மொத்தம் 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.12.2021 தேதியின் படி, அதிகபட்சம் 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Chief Technology Officer பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் B.E./ B. Tech degree in Computer Science/ Information Technology/ BCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre
- Chief Risk Manager பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் CA/CS இல் முதுகலை பட்டதாரி/ முதுநிலை மேலாண்மை பெற்றிருக்க வேண்டும்.
- Data Designer பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் B.Tech./ MCA படித்திருக்க வேண்டும்.
- Lead BI designer பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் B.Tech. (any discipline)/ MCA படித்திருக்க வேண்டும்.
- ETL Designer பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் B.Tech/MCA படித்திருக்க வேண்டும்.
- Specialist Officer (Legal) பணிக்கு DRT, NCLT போன்றவற்றிலும் வங்கியில் 5 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் 1.5 லட்சம் முதல் அதிகபட்சமாக 3.75 லட்சம் வரை பணியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
- மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 19.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.