தமிழகத்தில் இன்று (டிச.18) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் இன்று (டிச.18) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று (டிச.18) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று (டிச.18) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் துணை மின் நிலையத்தில் இன்று (டிச.18) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு:

ஒவ்வொரு நாளும் மின்கசிவு மற்றும் மின்கோளாறு காரணமாக ஏராளமான இடங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. இவ்வாறு விபத்துகள் தொடர்ந்து ஏற்படுவதால் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. ஆதலால் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழக அரசு மின் பராமரிப்பு பணிகளை மாதந்தோறும் மேற்கொள்கிறது. இதனால் மின் விபத்துகள் எண்ணிக்கை குறைகிறது.

தமிழகத்தில் ஜனவரி 3 முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் – 21 பொருட்களின் விபரம்!

அதனால் மின்வாரியம் மாதந்தோறும் மின்தடையை அறிவித்து மின் பராமரிப்பு பணிகளை முறையாக சரி செய்து வருகிறது. அதனால் அதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பரமத்தி வேலூர் துணை மின்நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகளில் தினசரி வகுப்புகள் நடைபெறுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

மேலும் பரமத்தி வேலூர் துணை மின்நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான பரமத்திவேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி.சூரியம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (டிச.18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. அத்துடன் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் உடனடியாக பரமத்தி வேலூர் துணை மின்நிலையத்தில் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!