தமிழகத்தில் ஜனவரி 3 முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் – 21 பொருட்களின் விபரம்!
தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்த சிறப்பு மளிகை தொகுப்பு அனைத்தும் ஜனவரி 3ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொங்கல் தொகுப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் பண்டிகை கால பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த மாதம் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைக்க தேவையான பொருட்களுடன், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பரிசாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதே போல ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் இலவச வேட்டி, சேலைகளும் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.
மாநில அரசு பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு தளர்வு – அரசாணை வெளியீடு!
இப்போது அரசின் பொங்கல் பண்டிகை தொகுப்பில் ரூ.62 மதிப்பிலான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கரும்பு ஆகிய 21 பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக அரசின் நிதியில் இருந்து ரூ.1,088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு அறிவித்த இந்த பொங்கல் தொகுப்பு வரும் ஜன.3ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகளில் தினசரி வகுப்புகள் நடைபெறுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
அந்த வகையில் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த பொங்கல் தொகுப்பு ஜன.3ம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்த பொங்கல் தொகுப்பு அனைத்து குடும்பங்களுக்கும் கிடைக்கிறது என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா தொற்று சூழலுக்கு மத்தியில் வழக்கம் போல ரேஷன் கடைகள் தோறும் டோக்கன் முறை செயல்படுத்தப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.