நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – அரசாங்கம் அறிவிப்பு!
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கு மத்தியில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (ஜூலை 9) முதல் அமலுக்கு வர உள்ளது.
ஊரடங்கு நீக்கம்
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியானது பொது மக்களை வன்முறையில் ஈடுபட தூண்டியது. அந்த வகையில் கடந்த பல வாரங்களாக அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழ்நிலைகளை கட்டுப்படுத்தும் விதமாக கிட்டத்தட்ட 7 பிரிவுகளின் கீழ் இலங்கையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், அந்நாட்டில் மேம்பட்டு வரும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு கொழும்பு உட்பட மற்ற மாகாணத்தின் மேல் விதிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தை காவல்துறை இன்று (ஜூலை 9) நீக்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, உயர்மட்ட சட்டத்தரணிகள் சங்கம், மனித உரிமைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு உட்பட்டு இந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இலங்கையின் மேல் மாகாணத்தில் நீர்கொழும்பு, களனி, நுகேகொட, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் மத்திய கொழும்பு ஆகிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – IRCTC யின் புதிய திட்டம் அறிமுகம்!
அந்த வகையில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கண்டிப்பாக தங்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்றும், ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் IGP விக்ரமரத்ன அறிவித்துள்ளார். இதற்கிடையில் சுமார் 22 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இலங்கை அரசாங்கம் கடந்த ஏழு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், இந்த நிலைமை மாறுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் எடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.