சிலிண்டர் முதல் கிரெடிட் கார்ட் வரை – ஜூலையில் வரவிருக்கும் அதிரடியான மாற்றங்கள் இது தான்!
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவடைய இருக்கும் நிலையில், ஜூலை மாதத்தில் எல்பிஜி சிலிண்டர் விலை முதல் கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம் வர இருக்கிறது.
மாற்றம் அறிவிப்பு
இந்தியாவில் வரவிருக்கும் ஜூலையில் பல அதிரடியான மாற்றங்கள் நிகழ உள்ளது. அதாவது எல்பிஜி சிலிண்டர் விலையிலும், கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம் வர இருக்கிறது. தற்போது எல்பிஜி சிலிண்டர் விலையை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மாற்றி வரும் நிலையில், வணிக சிலிண்டர் விலை மட்டும் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் முதல் தேதியில் குறைக்கப்பட்டது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. அதனால் ஜூலையில் இதன் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரெடிட் கார்டு:
அதே போல வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு செலவுகளுக்கு ஜூலை 1, 2023 ஆம் ஆண்டு முதல் சிஎஸ் கட்டணத்தை விதிக்கும் விதிமுறை நடைமுறை படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் வெளிநாடுகளில் செய்யும் செலவு 7 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால், நீங்கள் 20 சதவீத டிசிஎஸ் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான செலவுகளுக்கு 5 சதவீதமாக குறைக்கப்படும். அதனால் வெளிநாட்டில் கல்விக்காக கடன் பெற்றவர்கள், 7 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு மட்டும் 0.5 சதவீத டிசிஎஸ் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
CNG-PNG விலைகள்
சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலையில் மாற்றம் மாதத்தின் 1 ஆம் தேதி அல்லது முதல் வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி, மும்பை மற்றும் பிற நகரங்களில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், மாதத்தின் முதல் வாரத்திலேயே சிஎன்ஜி-பிஎன்ஜி விகிதத்தை மாற்றுவதால் அதனால் விரைவில் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலை மாறலாம் என்று கூறப்படுகிறது.
குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத்தொகை – வங்கி மூலமாக வழங்க திட்டம்!
ஆதார் பான் இணைப்பு
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க ஜூன் 30 ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை இணைக்காதவர்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் ரூ. 1000 செலுத்தி இணைத்து கொள்ளலாம். கொடுக்கப்பட்ட காலகெடுவுக்குள் பான் – ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் பான் எண் செயலிழந்துவிடும்.
வங்கி விடுமுறை நாட்கள்
RBI வெளியிட்ட விடுமுறை பட்டியலில் ஜூலை மாதத்தில் வங்கிகள் 2 – வது மற்றும் 4 – வது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். மேலும் ஜூலை 29 ஆம் தேதி முஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படும்.