குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத்தொகை – வங்கி மூலமாக வழங்க திட்டம்!
தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை வங்கியின் மூலமாகவே தகுதியுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உரிமைத்தொகை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டபடி வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் யார் யாருக்கெல்லாம் இந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதாவது, ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் ஆண்டு வருமானத்தை சோதனை செய்ய வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் குடும்ப தலைவருக்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை – அடுத்த 4 நாட்களுக்கு மக்களே உஷார்!
நிபந்தனைகள் மற்றும் தகுதிக்குட்பட்டவர்கள் ரூ. 1000 உரிமைத்தொகையை பெற விண்ணப்பிக்கலாம். பிறகு பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை வழங்கப்படும் இத்தொகையானது வங்கி கணக்கில் வரவு வைக்கபடவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.