PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ரூ.7 லட்சம் ஃப்ரீ இன்சூரன்ஸ், விவரங்கள் இதோ!
EDLI திட்டத்தின் கீழ் ஊழியர்கள் எவ்வித தொகை செலுத்தாமல் ரூ.7 லட்சம் வரை இன்சூரன்ஸ் பெற முடியும் என கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ்:
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது குறித்த விவரங்களை பலரும் அறியாமல் உள்ளனர். EPFO வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு திட்ட கணக்கு வைத்திருப்பவர்கள் எவ்வித தொகையும் செலுத்தாமல் 7 லட்சம் வரை இன்சூரன்ஸ் பெற முடியும்.
Post Office Gram Suraksha Yojana சேமிப்பு திட்டம் – 35 லட்சம் ரூபாய் வரை ரிட்டன்!
ஊழியர் பணியில் இருக்கும் போது உயிரிழந்தால் EPFO உறுப்பினரின் நியமனதாரர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு 7 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும். இதுவரை 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் ஏப்ரல் 2021 இல் 7 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. அதேபோல் இந்த திட்டத்தின் அடிப்படையில் இறந்த ஊழியர் மரணத்திற்கு 12 மாதங்களுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக பணியில் இருக்கும் பட்சத்தில் அவருக்கு குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாய்க்கான சலுகை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் தலைசிறந்த செல்வாக்கு பெற்ற முதல்வர்கள் பட்டியல் – முக ஸ்டாலின் முதலிடம்!
மேலும் இந்த திட்டத்திற்காக ஊழியர்கள் கூடுதல் பணம் ஏதும் செலுத்த தேவை இல்லை என கூறப்படுகிறது. EDLI பிரீமியத் திற்கான தொகையை நிறுவனம் அளிக்கும் PF தொகையில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. மேலும் EPFO வில் PF கணக்கு வைத்திருப்பவர்கள் தானாகவே இந்த சேமிப்புத் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என்றும் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இத்திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. EDLI திட்டத்தின் கீழ் காப்பீடு திட்டத்தின் நன்மையை பெற சட்டப்பூர்வ வாரிசு Form 51F நிரப்பும் பட்சத்தில் வாரிசுகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.