Post Office Gram Suraksha Yojana சேமிப்பு திட்டம் – 35 லட்சம் ரூபாய் வரை ரிட்டன்!
தபால் நிலையங்களில் கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் மூலம் ரூ. 10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை இதில் நீங்கள் முதலீடு செய்யலாம். மேலும் ரூ.35 லட்சம் வரை ரிட்டன் ஆக பெறலாம். இத்திட்டத்தை பற்றி விரிவாக இப்பதிவில் காண்போம்.
முதலீடு திட்டம்:
நம் அன்றாட வாழ்வில் எவ்வளவு வேலைகளுக்கு நாம் பணம் செலவழித்தாலும் அதில் ஒரு பகுதியாவது சேமிப்பு இருக்க வேண்டும். தற்போதைய நவீன காலகட்டத்தில் விற்கும் விலைவாசிக்கு மத்தியில் சேமிப்பு என்பது மாதாந்திர சம்பளம் பெறும் நபர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதிக அளவு தொகையை முதலீடு செய்ய முடிவதில்லை என்றாலும் குறிப்பிட்ட தொகையாவது சேமிக்க வேண்டும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறுகிய தொகையில் சேமிப்பை தொடங்க வாய்ப்பளித்து வருகின்றனர்.
இந்தியாவில் தலைசிறந்த செல்வாக்கு பெற்ற முதல்வர்கள் பட்டியல் – முக ஸ்டாலின் முதலிடம்!
இதனால் சாமானிய மக்களும் வரும் காலம் கருதி சேமிக்க தொடங்குகின்றனர். நாம் பள்ளியில் பயிலும் போதிலிருந்து சேமிக்கும் பழக்கம் நம்மிடம் உண்டு. சிறு சேமிப்பு என்ற திட்டம் மூலம் பள்ளி மாணவர்கள் சேமிக்கின்றனர். இத்தகைய நிலையில் தபால் நிலையம் கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் மூலம் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை இதில் நீங்கள் முதலீடு செய்யலாம். மேலும் 60 ஆண்டுகளுக்கான மெச்சூரிட்டி பலன் ரூ.34.60 லட்சம் நீங்கள் பெறலாம்.
Jio, Airtel மற்றும் Vi வழங்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!
19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் தபால் நிலையங்களில் கணக்கு தொடங்கி இத்திட்டத்தில் சேரலாம். முதலீட்டிற்கான பணத்தை மாதந்தோறும் செலுத்தலாம். சரியான தேதியில் பணம் செலுத்த முடியவில்லை என்றால் நிலுவை தொகையை கட்டி பாலிசியை புதுப்பித்துக் கொள்ள இயலும். நான்கு வருடங்கள் சரியாக பணம் செலுத்தி வந்தால் தபால் நிலையங்களில் கடன் பெரும் வாய்ப்புள்ளது. 80 வயது ஆகும் போது, உங்களின் சேமிப்புக்கான ரிட்டர்ன்ஸ் மற்றும் போனஸ் உங்களுக்கு கிடைக்கும் பாலிசி நபர் இறக்க நேர்ந்தால் வாரிசு அல்லது நீங்கள் நாமினி செய்த நபர்களுக்கு பணம் கிடைக்கும்.