தமிழகத்தில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்வு – மல்லிகை பூ விலை ரூ. 1500-க்கு விற்பனை!

0
தமிழகத்தில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்வு - மல்லிகை பூ விலை ரூ. 1500-க்கு விற்பனை!
தமிழகத்தில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்வு - மல்லிகை பூ விலை ரூ. 1500-க்கு விற்பனை!
தமிழகத்தில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்வு – மல்லிகை பூ விலை ரூ. 1500-க்கு விற்பனை!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை இன்று ரூ.500- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பூக்களின் விலை உயர்வு:

தமிழகத்தில் செப்.18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. பொதுமக்கள் இப்போதே வழிபாட்டிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விட்டனர். கடை வீதிகளில் விநாயகர் சிலை மற்றும் பூஜைக்கு தேவையான தேங்காய், பழம், பூ போன்ற பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. அத்துடன் சுபமுகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ. 600-க்கு விற்கப்பட்ட மல்லிகை பூவின் விலை இன்று ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மல்லிகை பூவை தொடர்ந்து பிச்சிப்பூ கிலோ ரூ. 800-க்கும் அரளிப்பூ ரூ. 200க்கும் முல்லைப்பூ ரூ.800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் – இன்று (செப். 16) முதல் விற்பனை!

பண்டிகை காலம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!