இந்தியாவில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் – இன்று (செப். 16) முதல் விற்பனை!
இந்தியாவில் அடுத்த மாதம் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் இன்று (செப் 16) முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
டிக்கெட் விற்பனை:
இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், பிசிசிஐ இணைந்து ஐசிசி ஆடவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை நடத்த இருக்கிறது. இந்த போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. 10 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அரையிறுதி ஆட்டங்கள் நவம்பர் 15 அன்று மும்பையிலும், நவம்பர் 16 அன்று கொல்கத்தாவிலும், இறுதி ஆட்டம் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெறுகிறது.
வியர்வையில் இருந்து கூட நிஃபா வைரஸ் பரவல் – பொதுமக்களுக்கான முக்கிய எச்சரிக்கை!
இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான அரையிறுதி, இறுதி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (செப். 16) இரவு 8 மணிக்கு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://tickets.cricketworldcup.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.