தமிழக மீனவர்கள் கவனத்திற்கு – மீன்வளத்துறை எச்சரிக்கை அறிக்கை!!
தமிழக மீன்வளத்துறை குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எச்சரிக்கை:
தினசரி வானிலை அறிக்கையில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கான பாதுகாப்பான சாத்தியக்கூறுகள் பற்றி தகவல் தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் அதனை பின்பற்றி கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை திட்டமிடுகின்றனர். ஆபத்து மற்றும் சூறாவளி வீச கூடிய பகுதிகளை முன்கூட்டியே அறிந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர்.
பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் – University Jobs Latest!!
இந்நிலையில், தமிழக மீன்வளத்துறை நெல்லை மாவட்ட மீனவர்களுக்கான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, நெல்லை மாவட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா, தென் தமிழகம் மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் வரும் ஜூன் 9ம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளது.