ரேஷன் கடை டீலர்களின் வேலைநிறுத்த போராட்டம் நிறைவு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ரேஷன் கடை டீலர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது வேலைநிறுத்த போராட்டம் நிறைவு பெற்றிருக்கிறது.
வேலைநிறுத்த போராட்டம்:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தெலுங்கானா ரேஷன் டீலர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) கடந்த இரண்டு நாட்களாகவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். அதாவது, ஒவ்வொரு குவிண்டால் உணவு தானியங்கள் வழங்குவதற்கும் ரேஷன் டீலர்களுக்கு ரூ.30,000 கவுரவ ஊதியம் வழங்கப்படும் அல்லது ரூ.200 முதல் ரூ.300 வரைக்கும் கமிஷன் வழங்கபட வேண்டும் எனவும் மாநில அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
Follow our Instagram for more Latest Updates
மேலும், ரேஷன் டீலர்களுக்கு காப்பீடு வழங்குதல், கருணை பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், ரேஷன் டீலர்களின் அறிவிப்பை அரசு ஏற்காத காரணத்தினால் திங்கட்கிழமையில் இருந்து ரேஷன் டீலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், கடந்த இரண்டு நாட்களுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
தமிழக மீனவர்கள் கவனத்திற்கு – மீன்வளத்துறை எச்சரிக்கை அறிக்கை!!
இந்நிலையில், தெலுங்கானா ரேஷன் டீலர்கள் நலச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) நேற்று டீலர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் வேலைநிறுத்த போராட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், வழக்கம் போல இன்று முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.