ஆண்குழந்தைகளுக்கான அருமையான அலுவலக சேமிப்பு திட்டம் – 8.5% வட்டி!
ஆண் குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக நல்ல லாபம் தரக்கூடிய மத்திய அரசின் அஞ்சலக அலுவலக திட்டம் குறித்தான முழு அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் கூடுதலாக 8.5% வரைக்கும் வட்டி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அலுவலக சேமிப்பு திட்டம்:
பொதுமக்கள் பலரும் தங்களின் எதிர்கால தேவைக்காக பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் பொதுமக்களின் வசதிக்காக மத்திய அரசு எக்கச்சக்கமான லாபத்தை தரக்கூடிய பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. மேலும், வங்கிகளில் பணம் சேமிப்பதை காட்டிலும் இதுபோன்ற சிறு சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி மற்றும் கடன் வசதி பொதுமக்களுக்கு வழங்கப்படுவதால் அதிகளவிலான பொதுமக்கள் இந்த சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும், இதில் முழுக்க முழுக்க ஆண்களுக்காகவே கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசால் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது, 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தையின் பேரிலேயே இந்த திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க இயலும். அதாவது, 10 வயதுக்குட்பட்ட சிறுவரின் பெயரில் கணக்குத் துவங்க விரும்பினால் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அந்த சிறுவனின் பெயரில் கணக்கை துவங்கலாம் எனவும், 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெயரிலேயே பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்த பொன்மகன் புது வைப்பு நிதி திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு 8.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும், இந்த வைப்பு நிதி திட்டத்தில் ஆரம்ப வைப்பு தொகையாக ரூபாய் 500 முதல் அதிகபட்ச வருடாந்திர வைப்புத் தொகையாக ரூபாய் 1.5 லட்சம் வரைக்கும் முதலீடு செய்ய இயலும். மேலும், இந்த திட்டத்தின் மூலமாக முதிர்வு காலம் 15 வருடங்களுக்குப் பிறகு குழந்தை வளர்ந்து மேஜரான பிறகு அதற்கான வட்டியுடன் சேர்த்து முதலீட்டாளருக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.