தமிழக கூட்டுறவு ரேஷன் கடைகளில் 6503 காலிப்பணியிடங்கள் – எப்போது நிரப்பப்படும்?
தமிழக ரேஷன் கடைகளில் 6503 காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைப்பாடுகளும் முடிவடைந்த நிலையிலும் தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படாமலேயே இருந்து வருகிறது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளில் கிட்டத்தட்ட 5578 விற்பனையாளர் மற்றும் 925 எடையாளர் காலி பணியிடங்கள் இருக்கின்றன. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரைக்கும் மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தின் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதாவது, விற்பனையாளர் பணியிடங்களுக்கு 3.75 லட்சம் விண்ணப்பங்களும், எடையாளர் பணிக்கு 41 ஆயிரம் விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
இந்த பணியிடங்களுக்கான நேர்காணலும் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில் ரேஷன் கடை வேலைக்கு தேர்வானவர்களின் பட்டியலை தற்போது வரைக்கும் கூட்டுறவு சங்கம் வெளியிடாமலேயே இருந்து வருகிறது. தற்போது கூட்டுறவு ரேஷன் கடைகளில் புதிய ஆட்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பின் புதிய வேலையாட்களை நியமிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆண்குழந்தைகளுக்கான அருமையான அலுவலக சேமிப்பு திட்டம் – 8.5% வட்டி!
இதன் அடிப்படையில் சீனியாரிட்டி என்கிற பெயரில் பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கைகளும் முடிவடைந்து விட்டன. ஆனால், தற்போது வரைக்கும் ரேஷன் கடை வேலைக்கு தேர்வானவர்களின் பட்டியலை அரசு வெளியிடாமல் இருப்பதால் அதனை உடனடியாக வெளியிடும்படி கோரிக்கைகளும் எழுப்பப்பட்டு வருகிறது.