
வங்கி ஊழியர்களுக்கு வாரம் 2 நாட்கள் விடுமுறை.. இந்திய வங்கிகள் சங்கம் எடுத்த தீடீர் முடிவு.. காரணம் என்ன தெரியுமா?..
நுகர்வோர் மற்றும் வணிக உரிமையாளர்கள் சேமித்த தங்களுடைய பணத்தை பாதுகாக்க வங்கிகள் செயல்படுகிறது. அந்த வகையில் வாடிக்கையாளரின் கோரிக்கைகளை தீர்க்க வங்கிகள் வாரத்தில் 6 நாட்கள் திறந்து இருக்கும். இந்நிலையில் வங்கி ஊழியர்களுக்கு வாரம் 2 நாட்கள் விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது வார நாட்கள் தவிர்த்து முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கி வந்த நிலையில் தற்போது மாதத்தில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதாவது மாதத்திற்கு 6 நாட்களுக்கு பதிலாக 8 நாட்கள் விடுமுறை அளிக்க இந்திய வங்கிகள் சங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை நாட்களுக்கு பதிலாக ஒவ்வொரு நாளும் கூடுதலாக 40 நிமிடங்கள் அதிகமாக வேலை செய்ய வலியுறுத்தி, வங்கிகளின் திறந்திருக்கும் நேரம் காலை 9:45 மணி முதல் மாலை 5:30 மணியாக அதிகரிக்கப்பட்டு இம்மாதம் முதல் நடைமுறை படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.























