இனி, Train லேட் ஆனா கவலை வேண்டாம்..உங்களுக்கு இலவச உணவு கிடைக்கும்..!! ” இதோ இதை பாருங்க”.!!
இந்திய ரயில்வே துறையானது, ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு சலுகைகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தொடர் கனமழை மற்றும் மூடுபனி ஆகியவற்றின் காரணமாக ரயில் சேவைகள் தாமதம் அடைவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இது போன்ற சூழலில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகுகின்றனர். எனவே, இதை கருத்தில் கொண்டு இந்தியன் ரயில்வே கேட்டரிங் & கார்ப்பரேஷன்(IRCTC) ஆனது சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் சேவைகள் தாமதம் அடைந்தால், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதை கீழே விரிவாக காண்போம்.
அதாவது, ரயில்வே சேவை தாமதம் அடையும் நேரத்தை கணக்கிட்டு காலை, மதியம், இரவு என 3 வேலை இலவச உணவுகள் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. முதலில் பயணத்தை தொடங்குவதற்கு டீ அல்லது காபி வழங்கப்படுகிறது.
காலை உணவு: 4 பிரட் துண்டுகள், பட்டர், 200ml ஜூஸ் மற்றும் அதோடு டீ அல்லது காபி பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.
மதிய மற்றும் இரவு உணவு: மதிய அல்லது இரவு உணவுகளுக்கு பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. ராஜ்மா, தால், பூரி, மிக்ஸட் மற்றும் ஊறுகாய் போன்றவை வழங்கப்படுகிறது.
கூடுதல் சலுகையாக 3 மணி நேரம் ரயில் தாமதமாக வந்தால், வாடிக்கையாளர்களுக்கு Refund வழங்கப்படுகிறது. இதை பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்த செயலில் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
























