நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு? அரசு முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதால் தற்போது அமலில் இருந்து வரும் முழு ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அளிப்பதாக ஜிம்பாப்வே அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீக்கம்
கடந்த வாரத்தில் புதிய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் அந்நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்ட நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலான ஊரடங்கு உத்தரவை ஜிம்பாப்வே அரசாங்கம் நீக்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், ‘நாடு முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக சரிவை கண்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு விகிதம் 97 சதவீதமாக உள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கை கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை குறிக்கிறது’ என்று தகவல் அமைச்சர் ஜென்ஃபான் முஸ்வேர் அமைச்சரவைக்கு பிந்தைய ஊடக சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு வெளியீடு!
இப்போது ஜிம்பாப்வே முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்ப்பட்டிருந்தாலும், நோய்த்தடுப்பு தொடர்பான அனைத்து பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளின் அமலாக்கம் தொடர்ந்து பலப்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சரவை வலியுறுத்தி இருக்கிறது. இதற்கிடையில் கடந்த ஜூன் 20ம் தேதி நிலவரப்படி, நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதம் பேர் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். மேலும் கொரோனா பரிசோதனைத் திறனை அதிகரிப்பதற்காக முக்கியமாக நுழைவுத் துறைமுகங்களில் சுய-பரிசோதனை கருவிகளை அமைச்சரவை அறிமுகம் செய்துள்ளது.