TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் செயல் அலுவலர் மற்றும் கூட்டுறவுத்துறை உதவி இயக்குனர் காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்டவர்களில், தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்புக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை TNPSC தற்போது வெளியிட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட செயல் அலுவலர் மற்றும் கூட்டுறவுத்துறை உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கைகளில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சிலர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தற்போது www.tnpsc.gov.in என்ற TNPSCன் அதிகாரப்பூர்வ தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர் பதவிகளுக்கு கடந்த 23.04.2022 மற்றும் 24.04.2022 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட 25 காலிப்பணியிடங்களுக்கான தேர்வில் சுமார் 468 பேர் கலந்து கொண்டனர். இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆகும். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் தங்களது சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலம் 29.06.2022 முதல் 07.07.2022 வரைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதே போல கூட்டுறவு தணிக்கை துறையில் உயர் இயக்குநர் பதவிகளுக்கு கடந்த 30.04.2022ம் தேதி நடத்தப்பட்ட 8 காலிப்பணியிடங்களுக்கான தேர்வில் சுமார் 493 பேர் கலந்து கொண்டனர். இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆகும். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தங்களது சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலம் 29.06.2022 முதல் 07.07.2022 வரைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.