தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு – புதிய கல்வி கொள்கை குறித்து அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் சிறந்த பல்கலைக்கழகமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் புதிய கல்வி கொள்கை குறித்து பேசியுள்ளார்.
புதிய கல்வி கொள்கை:
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் புரட்சிக்கவி பாரதிதாசன் பெயரால் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் இந்தாண்டு சிறந்த பல்கலைக்கழகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆண்டுதோறும் உயர்கல்வி நிறுவனங்களை கவுரவப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு சார்பில் கற்றல் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டு இவ்விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்த விழாவில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றனர். இதில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழகத்தின் சிறந்த பல்கலைக்கழகத்திற்கான கற்றல் விருதை பெற்றுள்ளது.
Exams Daily Mobile App Download
இவ்விருதை, உயர்கல்வி அமைச்சர் பொன்முடியிடம் இருந்து, பல்கலை. துணைவேந்தர் செல்வம் மற்றும் பதிவாளர் கணேசன் பெற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து தென் தமிழகத்தில் வளர்ந்து வரும் பல்கலைக்கழகத்திற்கான விருதை திருச்சியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் சிறந்த கடல்சார் பல்கலைக்கழகமாக சென்னை AMET தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக துணை மருத்துவக் கல்விப் பிரிவில் சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகம் விருது பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தால் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு? அரசு முக்கிய அறிவிப்பு!
கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. கடந்த 2016 ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட கல்விக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. இந்த கல்வி கொள்கையில் 10+2 என்ற பள்ளிப் பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்று திருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை நல்லது என்று ஆளுநர் கூறுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும். B.A, B. SC போன்ற படிப்புகளுக்கு கூட நுழைவுத் தேர்வு நடத்துகிறார்கள் என்றும் அதேபோல், மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு போன்றவற்றுக்கு நுழைவுத் தேர்வு நடத்தினால், இடைநிற்றல் அதிகரிக்கும் என்றார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்