தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு வெளியீடு!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி, கோதுமை உள்ளிட்டவை வழங்கப்படுவதாக புகார்கள் கிடைத்துள்ளன. அதனால் இதனை தடுக்கும் விதமாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ரேஷன் கடை பணியாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
தரமான அரிசி:
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பேரிடர் காலங்களில் அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு கிடைக்கும் வகையில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி தற்போது தகுதியான நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. அதனால் ரேஷன் கடைகளில் முறைகேடு ஏற்படுவது குறைந்துள்ளது. ஆனால் சில இடங்களில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தரமற்ற அரிசி பொருட்கள் கிடைப்பதாக புகார்கள் கிடைத்துள்ளது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை கூட்டுறவுத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அவர்கள் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தற்போது தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக புகார்கள் கிடைத்துள்ளன. அதனால் இவற்றை தவிர்க்கும் பொருட்டு கூட்டுறவு துறை அலுவலர்கள், நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் அரிசியை சரிபார்த்து அதன்பின் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் கண்டறியப்பட்டால் அதனை மீண்டும் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன் தரமற்ற பொருளை தனியாக எடுத்து வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.