பள்ளிகளில் இடைவேளை நேரம் நீட்டிப்பு – மாணவர்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ்!
மாணவர்கள் பள்ளியில் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காக மூன்று முறை வாட்டர் பெல் அடிக்க பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இடைவேளை:
தமிழகத்தை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதன் காரணத்தினால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கோடை விடுமுறை இரண்டு முறை நீட்டிப்பு செய்யப்பட்டு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதனால் மாணவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் தினமும் மூன்று முறை தண்ணீர் குடிப்பதற்கு என வாட்டர் பெல் அடிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.
கடுமையான வெயில் காரணமாக ஜூன் 26 வரை பள்ளிகள் மூடல் – மாநில அரசு அதிரடி!
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அனைத்து பள்ளிகளுக்கும், மாணவர்கள் தண்ணீர் குடிப்பதனை உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதாவது, தினமும் பள்ளியில் காலை நேரத்தில் இறைவனக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு தண்ணீரின் நன்மைகளை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும், கழிப்பறைகளை சுத்தமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாட்டினை செய்ய வேண்டும் எனவும், கட்டாயமாக மாணவர்கள் வீட்டில் இருந்து தண்ணீர் பாட்டில்களை எடுத்து வர அறிவுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.