கடுமையான வெயில் காரணமாக ஜூன் 26 வரை பள்ளிகள் மூடல் – மாநில அரசு அதிரடி!
நாடு முழுவதும் கோடை வெயில் அதிகமாக இருக்கும் நிலையில், சத்தீஸ்கர் மாநில பள்ளிகள் ஜூன் 26 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பள்ளிகள் மூடல்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு மே மாதம் முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் மாதம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக அனைத்து பள்ளிகளும் ஜூன் 26 ஆம் தேதி வரை மூடப்படும் என முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் நைட்டி, லுங்கி அணிய தடை – பொதுமக்கள் அவதி!
மேலும் அனைத்து பள்ளிகளும் ஜூன் 27 ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வலுவான வெப்ப அலைகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் வெப்ப அலைகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த அறிவிப்பை எடுத்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அதே போல ஜார்கண்ட் அரசும், பாட்னா அரசும் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது