கோபியை பற்றிய அனைத்து உண்மையையும் ஈஸ்வரியிடம் கூறிய எழில் – ப்ரோமோ ரிலீஸ்!
ஏற்கனவே குடும்பத்தில் பாக்கியாவிற்கு கோபி மீது சிறிய சந்தேகம் வந்திருக்கிறது. தற்போது ராஜேசும் அவ்வப்போது வீட்டிற்கு வருவதால் ஈஸ்வரிக்கும் சந்தேகம் வந்து எழிலிடம் கேட்க எழில் மொத்த உண்மையையும் ஈஸ்வரிடம் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தினருக்கு தெரியவந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் எவ்வளவு தவறு செய்தாலும் தனது சாமர்த்திய புத்தியால் கோபி தப்பித்துக்கொண்டே இருந்தார். ஆனால், தற்போது தொடர்ந்து கோபி மாட்டியபடியே தான் இருந்து வருகிறார். அதாவது, ராதிகாவிற்கு பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற உண்மை தெரியவந்ததுமே அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. கோபியை திருமணம் செய்துகொள்ளும்படி ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் வற்புறுத்தினாலும் கூட ராதிகா கோபியை விட்டு விலகியே தீர வேண்டும் என தெளிவாக இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
ஆனால், கோபி ராதிகாவை விடாமல் துரத்தித் துரத்திக் கொண்டே இருக்கிறார். அவ்வப்போது ராதிகாவிடம் மன்னிப்பு கேட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் கோபியை நன்றாக திட்டி வீட்டைவிட்டு விரட்டுகிறார். இதனால் மயூ அடிக்கடி வீட்டில் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். எனக்கு வீட்டில் இருக்கவே சுத்தமாக பிடிக்காவே இல்லை. எனது நண்பர்கள் வீட்டிலெல்லாம் இதுபோல சண்டைகள் நடந்ததே கிடையாது. என் வீட்டில் மட்டும் ஏன் இதுபோல தினமும் சண்டை நடக்கிறது என கூறி அழுகிறார். மயூவிற்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் ராதிகா திணறி கொண்டிருக்கிறார்.
ஜூலை 1 வரை 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடல் – அரசு அதிரடி!
இதற்கிடையே ராஜேஷும் அவ்வப்போது கோபியின் வீட்டிற்கு சென்று சண்டை போடுவதால் ஈஸ்வரிக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அதாவது, உண்மையாகவே கோபி தவறு செய்திருக்கிறாரா என எழிலிடம் கேட்கிறார். ஆனால், எழிலும், ராமமூர்த்தி தாத்தாவும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். கண்டிப்பாக உங்கள் இருவருக்கும் ஏதோ ஒரு உண்மை தெரிந்திருக்கிறது, யாரிடமும் கூறாமல் இருவரும் மறைக்கிறீர்கள் என ஈஸ்வரி கதறுகிறார். பின்னர், கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் ஈஸ்வரிக்கு எழில் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.