தமிழகத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் அதிக முட்டை உற்பத்தியாக கூடிய நாமக்கல் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால் முட்டை விற்பனையாளர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விலை உயர்வு:
தமிழகத்தின் முட்டை உற்பத்திக்கு பிரத்யேகமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இங்கு முட்டை விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சத்துணவு திட்டத்திற்கு தினசரி நாமக்கல் மண்டலத்தில் இருந்து சராசரியாக 40 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுவதால் விற்பனைக்கு முட்டைகள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் முட்டை விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.25 காசுகளாக உயர்ந்தது.
EPFO திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.7 லட்சம் வரை இலவச காப்பீடு!
அதனை தொடர்ந்து முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை கடந்த 22ஆம் தேதி 10 காசுகள் உயர்த்தப்பட்டது. தற்போது முட்டை ஒன்றின் விலை ரூ.5.35 காசுகளாக உயர்ந்துள்ளது. இதனால் முட்டை விற்பனையாளர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது முட்டையின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கோடை காலம் தொடங்கியது முதல் முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முட்டை விற்பனை மற்றும் நுகர்வு அதிகரித்து வருவதால் அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோடைக்கால துவக்கத்திலேயே அதிகளவு வெப்பத்தினால் வயதான கோழிகள் இறந்து விடும் என்பதால் அவற்றை பண்ணையாளர்கள் விற்பனை செய்துவிட்டனர். இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி கணிசமாக குறைந்து விற்பனைக்கு முட்டைகள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் தற்போது ஓலை ஏற்றப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர். இனி சில்லரை விற்பனையில் ஒரு முட்டையின் விலை 7 ரூபாய் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.