EPFO திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.7 லட்சம் வரை இலவச காப்பீடு!
இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாயிலாக ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது இத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு இலவசமாக காப்பீடு தொகையும் வழங்கப்பட உள்ளதாக EPFO நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் கவனத்திற்கு
இந்தியாவில் அரசு ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி அவர்களின் PF கணக்கின் கீழ் சேமிக்கப்படுகிறது. இந்த தொகையுடன் அரசு சார்பாகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தப்படும். இந்த தொகைக்கு வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் தொகையானது EPFO நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்த தொகையானது ஊழியர்கள் ஓய்வு பெறும்போது மாதந்தோறும் அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
இந்த தொகை அவர்களின் முதிர்வு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்திற்கு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் ஆண்டுக்கு ஓரு முறை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு வட்டி விகிதம் 8.1% ஆக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் கட்டாயமாக நாமினிகளை நியமனம் செய்ய வேண்டும் என்று தொழிலாளர் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து இந்த திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, EPFO திட்டத்தில் உள்ளவர்களுக்கு ஆயுள் காப்பீட்டின் பலனையும் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் EPFன் அனைத்து சந்தாதாரர்களும் ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு திட்டமானது 1976 (EDLI) கீழ் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதிலுள்ள ஒவ்வொரு பயனாளர்களுக்கும் 7 லட்சம் ரூபாய் வரை இலவச காப்பீடு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் இத்திட்டத்தின் பலனை நாமினியாக நியமனம் செய்தவர்களால் மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.