தீபாவளி விடுமுறை நீட்டிப்பு?! – மாணவர்களுக்கு ஜாலி தான்!
நடப்பு ஆண்டில் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை அன்று வருவதால் கூடுதலாக விடுமுறை அறிவிப்பு குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விடுமுறை:
வழக்கமாக தீபாவளி பண்டிகை சமயத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் தொடர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகைக்கு மக்கள் அதிக அளவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணங்களை மேற்கொள்வார்கள். இதன் காரணமாகவே தொடர் விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை அன்று வர உள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை முதல் அதிக அளவில் மக்கள் பயண பயணிக்க தொடங்குவார்கள். பண்டிகை ஞாயிற்றுக்கிழமை முடிந்து அன்று அதிக அளவில் மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்புவார்கள்.
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!!
இதனால் அதிக கூட்ட நெரிசல் ஏற்படும், மேலும் அனைவரும் ஒரே நாளில் இருப்பிடத்தை அடைவது சாத்தியம் இல்லை. இதனால் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை ( நவம்பர் 13 ) அன்று அரசு விடுமுறை அளிக்க கோரி பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சங்கம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.