தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கனமழை:
தென்னிந்திய பகுதி மற்றும் கேரள கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் நவம்பர் 12 ஆம் தேதி வரையிலும் கனமழை பொழியலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடுய லேசான முதல் மிதமான மழை பொழியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்களுக்கு “ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை” – மத்திய அரசு அறிமுகம்!
சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக, மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பொழியலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று லட்சத்தீவு பகுதி மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 55 கிலோமீட்டர் வேகம் வரையிலும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.