அக்.1 முதல் 260 தனியார் மதுபான கடைகள் மூடல் – அரசு முடிவு!

0
அக்.1 முதல் 260 தனியார் மதுபான கடைகள் மூடல் - அரசு முடிவு!
அக்.1 முதல் 260 தனியார் மதுபான கடைகள் மூடல் - அரசு முடிவு!
அக்.1 முதல் 260 தனியார் மதுபான கடைகள் மூடல் – அரசு முடிவு!

டெல்லியில் தனியார் மதுபான சில்லறை விற்பனைக்கான புதிய உரிமங்கள் நவம்பர் 17 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் அக்டோபர் 1 முதல் சுமார் 260 தனியார் மதுபான கடைகள் மூடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான கடைகள் மூடல்:

கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக தடை செய்யப்பட்டிருந்ததான டாஸ்மாக் மதுபான கடைகள் தற்போது நாடு முழுவதும் செயல்பட துவங்கியுள்ளது. அந்த வகையில் தலைநகர் டெல்லியிலும் தற்போது மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் தனியார் சில்லறை மதுபான விற்பனைக்கான புதிய உரிமங்கள் நவம்பர் 17 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் அக்டோபர் 1 முதல் தனியார் மதுபான கடைகள் செயல்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவளம் கடற்கரைக்கு ‘ப்ளூ ஃப்ளாக்’ விருது – தமிழகத்தில் முதல் முறை!

அந்த வகையில் அக்டோபர் 1 முதல் நவம்பர் 16 வரையில் கிட்டத்தட்ட 26 வார்டுகளில் தனியார் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும். இந்த காலகட்டத்தில் அரசு நடத்தும் மதுபானக் கடைகள் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது டெல்லி அரசின் புதிய கலால் கொள்கையின்படி, நவம்பர் 17 முதல் டெல்லியில் தனியார் மதுபான நிலையங்களில் விற்பனை துவங்குகிறது. மேலும் இந்த கடைகளுக்கான அனுமதியும் நவம்பர் 17 ஆம் தேதி கொடுக்கப்பட இருக்கிறது. அதனால் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குப் பிறகு 260க்கும் மேற்பட்ட தனியார் மதுபானக் கடைகளை மூட டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் கடைகளை மூடும் செயல்முறை டெல்லியில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. நகரத்தில் உள்ள 850 சில்லறை மதுபானக் கடைகளில் கிட்டத்தட்ட 60 சதவிகிதத்தை டெல்லி அரசு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. புதிய கொள்கையின் கீழ், டெல்லியில் உள்ள மொத்த 32 மண்டலங்களில் 20 மண்டலங்களை தனியார் மதுபான சில்லறை விற்பனைக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இப்போது டெல்லியில் அனைத்து பழைய மதுக்கடைகளும் மூடப்பட்டு வருகின்றன.

WhatsApp நிறுவனம் முக்கிய எச்சரிக்கை – பிளஸ், ஜிபி வெர்சன் பயனர்கள் கவனத்திற்கு!

இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘ டெல்லியில் புதிய கலால் கொள்கையை அமல்படுத்திய பிறகு, மதுபான விற்பனையின் அனுபவம் மாறும். 2019-20 ஆம் ஆண்டில் டெல்லி அரசுக்கு கலால் மூலம் சுமார் ரூ.6400 கோடி வருவாய் கிடைத்தது. இப்போது புதிய கலால் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சுமார் ரூ .3,500 கோடி அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் மூலம், ஆண்டு வருமானம் சுமார் ரூ .10,000 கோடிகள் கிடைக்கும்’ என தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள 272 வார்டுகளில் கிட்டத்தட்ட 80 அரசு அல்லது தனியார் மதுக்கடைகள் இல்லை.

இந்திய விமானங்களுக்கு செப்.26 வரை தடை உத்தரவு நீட்டிப்பு – கனடா அரசு!

மேலும் 23 வார்டுகளில் தனியார் மதுபான விற்பனை நிலையங்கள் மட்டுமே உள்ளன. அக்டோபர் 1 முதல் நவம்பர் 16 வரை அரசு மதுபானக் கடைகள் மட்டுமே செயல்படுவதால், இந்த 23 வார்டுகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும். அந்த வகையில் ஆர்.கே.புரம், ஆண்ட்ரூஸ் கஞ்ச், லஜ்பத் நகர், பட்பர்கஞ்ச், ரஜோரி தோட்டம், துக்ளகாபாத், கோட்லா முபாரக்பூர், இந்தர்புரி, ராணி பாக், ரோக்தாஷ் நகர், ஜில்மில் மற்றும் பாண்டவ் நகர் உள்ளிட்ட 23 நகராட்சி வார்டுகளில் மதுக்கடைகள் இருக்காது என ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!