கோவளம் கடற்கரைக்கு ‘ப்ளூ ஃப்ளாக்’ விருது – தமிழகத்தில் முதல் முறை!
தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேச புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
நீலக்கொடி:
சிறந்த, சுற்றுச்சூழல் மிக்க, கடல்சார் சூழலியைப் பேணிக்காக்கும் அழகிய கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. டென்மார்க் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அழகான கடற்கரை மற்றும் கடல்சார் சூழலியலை பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிக்கான மற்றொரு அங்கீகாரமாக தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேசப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய விமானங்களுக்கு செப்.26 வரை தடை உத்தரவு நீட்டிப்பு – கனடா அரசு!
இது குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, கோவளம் மற்றும் ஈடன் கடற்கரைகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலமும், 2020-இல் அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் மறு சான்றினாழும் இந்தியாவில் தற்போது 10 சர்வதேச நீலக்கொடி கடற்கரைகள் உள்ளன என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
WhatsApp நிறுவனம் முக்கிய எச்சரிக்கை – பிளஸ், ஜிபி வெர்சன் பயனர்கள் கவனத்திற்கு!
மேலும் ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவுக்கான பயணத்தில் இன்னுமொரு மைல்கல்லாக இது அமைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். சிவராஜ்பூர்- குஜராத், கோக்லா- டையூ, காசர்கோடு மற்றும் படுபித்ரி- கர்நாடகா, கப்பாட்- கேரளா ருஷிகொண்டா- ஆந்திரா, கோல்டன்- ஒடிசா மற்றும் ராதாநகர்- அந்தமான் மற்றும் நிக்கோபார், ஆகிய எட்டு இந்திய கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழை டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை உறுதி செய்துள்ளது.