இந்திய விமானங்களுக்கு செப்.26 வரை தடை உத்தரவு நீட்டிப்பு – கனடா அரசு!
கனடா நாட்டு அரசு தற்போது ஆறாவது முறையாக இந்திய விமானங்களுக்கான தடையை செப்டம்பர் 26ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
விமான தடை நீட்டிப்பு:
உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா உயிர்கொல்லி நோய் தீவிர வேகமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகமே அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் விரைவாக பரவுவதால் தடுப்பு பணியாக உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நாடுகளும் தன் நாட்டு மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. மேலும் கல்வி நிறுவனங்களுக்கு கால வரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.
WhatsApp நிறுவனம் முக்கிய எச்சரிக்கை – பிளஸ், ஜிபி வெர்சன் பயனர்கள் கவனத்திற்கு!
அதனை தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடியது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் சில நாடுகள் கொரோனா பரவும் அச்சம் காரணமாக இந்திய பயணிகள் விமானத்தை ரத்து செய்தது. மற்ற நாடுகளை தொடர்ந்து கனடா இந்தியாவில் அதிகம் பரவிய டெல்டா வகை வைரஸ் காரணமாக பயணிகள் விமானத்தை ரத்து செய்தது.
காந்தி கிராம பல்கலையில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி – செப்.27 நுழைவுத்தேர்வு!
மேலும் அத்தடையை தொடர்ந்து நீட்டித்தும் வருகிறது. இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவைக்கான தடையை கனடா செப்டம்பர் 21 ஆம் தேதி வரை அமல்படுத்தி இருந்தது. தற்போது 6வது முறையாக மேலும் தடையை நீட்டித்துள்ளது. அதன் படி செப்டம்பர் 26 வரை இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமானத்துக்கு அனுமதி இல்லை என்று கனடா அரசு அறிவித்துள்ளது. மேலும் பிற நாடுகளின் வழியாக கனடா வரும் இந்திய பயணிகள் கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.