WhatsApp நிறுவனம் முக்கிய எச்சரிக்கை – பிளஸ், ஜிபி வெர்சன் பயனர்கள் கவனத்திற்கு!
WhatsApp போன்ற மூன்றாம் தரப்பு செயலி பயன்படுத்தும் பயனர்கள் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு மாறாவிட்டால் WhatsApp கணக்கு நிரந்தரமாக தடை செய்யப்படலாம் என WhatsApp நிறுவனம் எச்சரித்துள்ளது.
WhatsApp அறிவிப்பு:
உலகம் முழுவதும் மொபைல் போன் அத்தியாவசிய தேவையாக மாறி உள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் WhatsApp பயனராக உள்ளனர். அனைவரும் WhatsApp பயன்படுத்தி சாட் செய்வது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து WhatsApp பிளஸ், ஜிபி WhatsApp என பல விதங்களில் இந்த செயலி வலம் வந்து கொண்டுள்ளது. பயனர்கள் பலர் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
வரதட்சணை பெற்றால், கொடுத்தால் பட்டம் ரத்து – பல்கலை அதிரடி உத்தரவு!
இது போன்ற மூன்றாம் தரப்புப் பயன்பாடு WhatsAppல் வழங்கப்படாத பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இது போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்படுவதன் மூலம் பயனர்களை கவரும் யுக்தியை டெவலப்பர்கள் கையாண்டு வருகின்றனர். மூன்றாம் தரப்பு செயலிகள் பாதுகாப்பு நடைமுறைகளை எங்களால் சரிபார்க்க முடியவில்லை என WhatsApp நிறுவனம் கூறியுள்ளது.
காந்தி கிராம பல்கலையில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி – செப்.27 நுழைவுத்தேர்வு!
‘நீங்கள் வாட்ஸ்அப் பிளஸ் அல்லது ஜிபி WhatsApp தவிர வேறு ஒரு பயன்பாட்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் பயன்பாட்டைப் பதிவிறக்குவதற்கு முன்பு உங்கள் சாட் ஹிஸ்டரியை சேமிக்க பரிந்துரைக்கிறோம்’ என WhatsApp நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஸ்பேம்களை தடுக்க மூன்று மில்லியனுக்கும் அதிகமான இந்திய கணக்குகளை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்துபவர்கள் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு மாறாவிட்டால் வாட்ஸ்அப் கணக்கை நிரந்தரமாக தடை செய்யலாம் என நிர்வாகம் எச்சரித்துள்ளது.