தமிழகத்தில் மலிவு விலை குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை – உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!

0
தமிழகத்தில் மலிவு விலை குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை - உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் மலிவு விலை குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை - உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் மலிவு விலை குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை – உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!

உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ் பெறாமல் விற்பனைக்கு வரும் மலிவு விலை குளிர்பானங்கள் விற்பனை செய்வதை அதிகாரிகள் தடை செய்துள்ளனர். மேலும் அதனை மீறும் விற்பனையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

உணவு பாதுகாப்பு:

விற்பனைக்கு வரும் அனைத்து உணவு பொருட்களுக்கும் அரசின் உணவு பாதுகாப்பு துறையில் தரச்சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும். அவ்வாறு தரச் சான்றிதழ் பெறாமல் விற்கப்படும் உணவு பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டவை ஆகும். இது போன்று அரசின் அனுமதி இல்லாமல் பல உணவு பொருட்கள் சந்தையில் விற்பனையில் உள்ளது. அது போன்று புதுவண்ணாரப்பேட்டையில் 10 ரூபாய் பன்னீர் சோடா வாங்கி குடித்த இரு சிறுவர்கள், ரத்த வாந்தி எடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதில் கலந்துள்ள ரசாயனம் குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது.

அக்.1 முதல் 260 தனியார் மதுபான கடைகள் மூடல் – அரசு முடிவு!

மேலும் சிறுவர்கள் குளிர்பானம் குடித்த கடையினை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கடையில் காலாவதி தேதி முடிந்த குளிர்பானங்கள், தேதி குறிப்பிடாமல் உள்ள குளிர் பானங்கள் மற்றும் மாவு பாக்கெட்டுகள் போன்றவை பறிமுதல் செய்யபட்டுள்ளது. சிறுவர்கள் குடித்த குளிர்பானம் கிருஷ்ணகிரி மாவட்டம், எரா ஹல்லி கிராமத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன் மொத்த வியாபார கடை திருவள்ளூரில் உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்ய உள்ளனர் என்று கூறினார்.

கோவளம் கடற்கரைக்கு ‘ப்ளூ ஃப்ளாக்’ விருது – தமிழகத்தில் முதல் முறை!

குளிர்பான கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்களின் மாதிரிகளை சேகரித்தனர். ஆய்விற்கு பின், விற்பனைக்கு அனுப்பப்பட்ட குளிர்பானங்களை திரும்ப பெற அறிவுறுத்தப்பட்டதுடன், தற்காலிகமாக குளிர்பான வினியோகத்தை நிறுத்தவும் வினியோகிஸ்தருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், முறையான அனுமதி பெறாத குளிர்பானம் மற்றும் உணவு பொருட்களை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என்றும், கடைக்காரர்கள் விற்பனை செய்ய வேண்டாம். மேலும், அவ்வாறு விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!