இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற முடிவு – எப்படி மாற்றுவது?
இந்தியாவில் ரிசர்வ் வங்கி 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களிடம் இருக்கும் நோட்டுகளை எவ்வாறு மாற்றுவது என்பதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டு:
இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் படி கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூபாய் 500 மற்றும் 1000 மதிப்புள்ள நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு ரூ. 2000 மதிப்புள்ள நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், பொதுமக்களின் மத்தியில் ரூபாய் 2000 மதிப்புள்ள நோட்டுகள் அதிகமாக உபயோகிக்காத காரணத்தினால் கடந்த 2018 -19 ஆம் ஆண்டில் இருந்தே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது முழுமையாகவே நிறுத்தப்பட்டு விட்டது. மேலும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளே போதுமானதாக இருந்தது. இந்நிலையில், மீண்டும் ரிசர்வ் வங்கி 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற முடிவு செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் நியமனம்.. 34ஆக உயர்ந்த எண்ணிக்கை – வெளியான அறிவிப்பு!
மேலும், பொதுமக்களின் கையில் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியின் மூலமாக டெபாசிட் செய்தோ அல்லது பிற நோட்டுகளாகவோ செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் ஒரே நேரத்தில் ரூபாய் 20,000 வரைக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களாக டெபாசிட் செய்து கொள்ளலாம் அல்லது மாற்றம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் துணை அமைப்புகள் வாயிலாக ஒரு நாளைக்கு ரூபாய் 4000 வீதத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி கணக்கு வைத்திருப்பவர் மட்டுமல்லாமல் யார் வேண்டுமானாலும் ஒரு நாளைக்கு ரூபாய் 20,000 வரம்பு வரைக்கும் 2000 நோட்டுகளாக மாற்றிக் கொள்ள இயலும் என அறிவிக்கப்பட்டுள்ளது.