உச்சநீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் நியமனம்.. 34ஆக உயர்ந்த எண்ணிக்கை – வெளியான அறிவிப்பு!
இந்தியாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்தவர்கள் ஓய்வு பெற்ற நிலையில், புதிய நீதிபதிகளாக பிரசாந்த் குமார் மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் பதவியேற்றனர்.
புதிய நீதிபதிகள்:
இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த தினேஷ் மகேஸ்வரி மற்றும் எம். ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் 34 பணியிடங்கள் இருந்தது தற்போது 32ஆக குறைந்துள்ளது. அது மட்டுமில்லாமல் சில நீதிபதிகள் அடுத்தடுத்து ஓய்வு பெற இருக்கின்றனர். அதனால் உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதிகளை பரிந்துரை செய்யும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான கெலிஜியம் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பிரசாந்த் குமார் மிஷ்ரா, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன் ஆகியோரை பரிந்துரை செய்தது.
கோவை ஆவின் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – தேர்வே இல்லாமல் ரூ.43,000/- சம்பளத்தில் பணி!
இந்நிலையில் அவர்கள் பரிந்துரை செய்யப்பட்டு 48 மணி நேரத்தில் மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. அதன் பின் , உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பிரசாந்த் குமார் மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நேற்று பதவியேற்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன் காரணமாக நீதிபதிகளின் எண்ணிக்கை 34யை எட்டி இருக்கிறது, மேலும் நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடுத்த மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர். அதனால் மீண்டும் நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.