தமிழகத்தில் தற்காலிக தொழிலாளர்களுக்கும் இறப்பு சலுகை – அமைச்சர் ஒப்புதல்!
தமிழகத்தில் தற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்யும் ஊழியர்கள் பணியின் போது இறந்தால் அவர்களுக்கான இறப்பு சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு சலுகை :
தமிழகத்தில் எல்லை பாதுகாப்பு பணியில் வேலை செய்யும் ஊழியர்கள் சாலை பணி மற்றும் கட்டிடத் தொழில் உள்ளிட்ட வேலை செய்யும் வெளி மாநில ஊழியர்கள் பணியின் போது இறந்தால் அவர்களுக்கான சலுகைகளை தமிழக அரசு வழங்குகிறது. அதாவது, இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களும் கடினமான வேலை செய்து வருவதாகவும், குடும்பத்தின் சூழல் காரணமாக கடின பணி சுமையை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அந்த ஊழியர்களுக்கும் அரசின் நலத்திட்டங்களை வகுத்துக் கொடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
மக்களை அச்சுறுத்தும் நிபா & டெங்கு பரவல் – தடுப்பு பணியாக மீண்டும் கட்டுப்பாடுகள்?
இதனைத் தொடர்ந்து, தற்போது தற்காலிக ஊதியம் பெறும் ஊழியர்களுக்கும் பணியின் போது இறந்தால் அவர்களின் உடலை பாதுகாத்து, சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக ஊதியம் பெரும் தொழிலாளர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கான செலவாக ரூ. 1000 வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ரூ. 10000 வழங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.