மக்களை அச்சுறுத்தும் நிபா & டெங்கு பரவல் – தடுப்பு பணியாக மீண்டும் கட்டுப்பாடுகள்?
இந்தியா முழுவதும் டெங்கு மற்றும் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த வேளையில் பண்டிகைகளும் அடுத்தடுத்து வரவுள்ளதால் தொற்று பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.
கட்டுப்பாடுகள்:
இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து நிபா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த நிபா வைரஸ் தொற்றால் கேரளாவில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் நிபா வைரஸ் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் டெங்கு காய்ச்சலால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
BECIL ஆணையத்தில் Manager காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,25,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இவ்வாறு நிபா மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமெடுத்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி போன்ற பண்டிகைகளும் வரவுள்ளது. இதனால் மக்கள் அதிக அளவில் பொது இடங்களில் கூடுவர். இதன் காரணமாக தொற்று மேலும் தீவிரமெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவிக்க கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிலைமை மோசமடைந்ததால் மீண்டும் ஒரு ஊரடங்கு விதிக்கப்படலாம்.