தீவிர புயலாக வலுப்பெற்ற “டானா”.. தமிழகத்தில் கனமழை பொழியும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!
கடந்த 24 மணி நேரத்தில் தென் மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 10 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலவி வரும் டானா புயல் தற்போது மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் தற்போது ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 280 கி.மீ., மேற்கு வங்கத்தின் சாகர் தீவில் இருந்து 370 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எகிறும் வெங்காயத்தின் விலை.. கிலோ எவ்வளவு தெரியுமா?? இன்றைய நிலவரம் இதோ!!
இன்று (அக்டோபர் 24) நள்ளிரவு முதல் நாளை (அக்டோபர் 25) காலை வரையிலான நேரத்தில் ஒடிசா, மேற்குவங்கம் இடையே புரி- சாகர் தீவையாெட்டி கரையை கடக்கும் என்றும் கணித்துள்ளது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தென்தமிழகம், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























