பொங்கல் பரிசு 2023 முடிவை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் – அமைச்சர் தகவல்!!
தமிழகத்தில் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுக்கு ரொக்கப் பரிசுடன், பச்சரிசி, சர்க்கரை,நெய் உள்ளிட்ட பொருட்களும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு பொருட்கள் எப்போது வெளியாகும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதால், இந்த முறை ரொக்க பரிசாக 1000 ரூபாயும் அத்துடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 100 ml அல்லது 500 ml ஆவின் நெய் வழங்க உள்ளதாக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow our Instagram for more Latest Updates
மேலும் தற்போது, பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டு வருவதால் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரேஷன் அட்டைதாரர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.
Exams Daily Mobile App Download
இந்த கூட்டத்திற்கு பிறகு, இவரிடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இவர் தெரிவித்துள்ளதாவது, பொங்கல் பரிசு குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியானதும் கூட்டுறவுத்துறை இப்பணியை விரைந்து செயல்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.