பள்ளி பாடப்புத்தகங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரை – நாடாளுமன்ற நிலைக்குழு வெளியீடு!!
நாட்டின் பல்வேறு மதங்கள், போதனைகளுக்கு பள்ளி பாடப்புத்தகங்களில் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்றும் வேதங்கள், பகவத் கீதை உள்ளிட்டவை பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
பள்ளி புத்தகங்கள்
தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கல்வி, விளையாட்டு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்துள்ளது. இதில் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சிலின் ஆகியவை பள்ளி பாடப்புத்தங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
Follow our Instagram for more Latest Updates
நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாவது, சோழர்கள், விக்ரமாதித்தன், விஜயநகர பேரரசு, சாளுக்கியர்கள், திருவிதாங்கூர், கோந்த்வானா, வடகிழக்கு பிராந்திய மன்னர்கள் ஆகியவை குறித்து பள்ளிப் பாடப்புத்தகங்களில் விரிவான தகவல்கள் இடம்பெறவில்லை என்றும் மேற்கண்ட பேரரசுகளின் வரலாறு விரிவாக இடம்பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய சுதந்திர போராட்டத்தின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு – கல்வி கற்பிக்க நடவடிக்கை!
Exams Daily Mobile App Download
மேலும் இந்திய வரலாறு பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றை முன்னிறுத்தி கற்பிக்கப்பட வேண்டும். செம்மொழியான தமிழ் மொழிக்கு பள்ளி பாடபுத்தகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் உலக பொதுமறையான திருக்குறள் கட்டாயமான முறையில் இடம்பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மதங்கள், இந்திய வேதங்கள், பகவத் கீதை, உள்ளிட்டவற்றிற்கும் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.