தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு – கல்வி கற்பிக்க நடவடிக்கை!
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதன் மூலம் பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கணக்கெடுப்பு:
தமிழக அரசு அனைத்து தரப்பு குழந்தைகளுக்கும் தரமான கல்வியை அளிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது குறிப்பாக தொடக்க கல்வியை மாணவர்களுக்கு முறையாக அளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது பள்ளி செல்லாமல் உள்ள குழந்தைகளை கணக்கெடுக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மாநிலம் முழுவதும் 6 முதல் 15 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு வரவழைத்து கல்வியை கற்பிக்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டு உள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 18,000 குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Bonafide சர்டிபிகேட் இனி ‘இதற்கு’ தேவையில்லை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
Exams Daily Mobile App Download
தற்போது இந்த குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நடப்பு ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி வரும் 2023 ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அம்மாவட்ட பள்ளிக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.